3.29.2017

துளி .59

ஒன்றுமே புரியவில்லை
எனக்கு பிடிக்கவில்லை
நீ எழுதுவது
கவிதையே யில்லை
ஏற்று கொள்கிறேன்
உன் விமர்சனங்களை 
உனக்கு
பிடிக்காத கவிதைகளை
எழுதி எழுதி முடிவில்
நான் எழுதக்கூடும்
உனக்கும் எனக்கும்
பிடித்த கவிதை ஒன்றை

                                                      25.03.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...